உங்கள் சாதனைகளின்
ஒளிப்பதிவுகள்
இதோ வருகிறது
உலகம் முழுவதிலும்
முக்கியமாக
காண்பிக்கப்படுகிறது
உங்கள் உற்பத்தி
குறித்தே எல்லோராலும்
பேசப்படுகிறது
திருப்தியுடன்
கைகளைப் பரிமாறி
அதிகாரங்களைப் பகிர்ந்து
புன்னகைத்து
உயர்த்திப் பேசுங்கள்.
-------------------------------------------
About This Blog
இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் மிதக்கும் கோடுகள்..
கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் தங்கியிருந்த பொழுது இந்தப் புகைப்படங்கள் பிடிக்கப்பட்டன. முழு இடங்களுக்கும் செல்ல முடியாத நிலையில் கிளிநொச்சி நகரம் உதயநகர், ஆனந்தபுரம், கனகபுரம், திருநகர் முதலிய இடங்களுக்குச் சென்றிருந்தேன்.
தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக